Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேக்குமரங்கள் அகற்றம் நீதிமன்றம் நோட்டீஸ்; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தேக்குமரங்கள் அகற்றம் நீதிமன்றம் நோட்டீஸ்; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தேக்குமரங்கள் அகற்றம் நீதிமன்றம் நோட்டீஸ்; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தேக்குமரங்கள் அகற்றம் நீதிமன்றம் நோட்டீஸ்; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : ஜூன் 26, 2024 07:44 AM


Google News
மதுரை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமனுார் சதீஷ். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:

கண்டமனுார் மயானத்தில் தேக்குமரங்கள் இருந்தன. அவை அரசுக்கு சொந்தமானவை. சட்டவிரோதமாக சிலர் அகற்றினர். மக்கள் கேள்வி எழுப்பியபோது மிரட்டல் விடுத்தனர். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்பான நபரிடமிருந்து தொகையை வசூலிக்க வேண்டும். உடந்தையாக இருந்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு கலெக்டர், மாவட்ட வன அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us