Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு

நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு

நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு

நீர்பிடிப்பில் தொடர் மழை 131 அடியை எட்டியது பெரியாறு -ஒரே நாளில் 2 அடி உயர்வு

ADDED : ஜூலை 31, 2024 10:47 PM


Google News
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்து வரும் தொடர் மழையால் ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து நேற்று மாலை நிலவரப்படி 131 அடியை எட்டியது.

கடந்த நான்கு நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5339 கன அடியானது. இதனால் ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி வரை உயர்ந்து. நேற்று மாலை நிலவரப்படி 131 அடியை எட்டியது. தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1311 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு மின் நிலையத்தில் 118 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும் நீர்மட்டம் 136 அடியை எட்ட வாய்ப்புள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us