/உள்ளூர் செய்திகள்/தேனி/ சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் நுாற்றாண்டு பள்ளி வகுப்பறைக்கு 2 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு

காய்கறித்தோட்டம்
தேசிய மாணவர் படை ஆசிரியர் அப்துல் ரஹீம் மேற்பார்வையில் மாணவர்கள் கூட்டு முயற்சியால் காய்கறி தோட்டம் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. பருவ காலங்களில் இங்கு விளையும் அவரை, பீர்க்கை, புடலை, சுரைக்காய், தக்காளி, கத்தரி, மிளகாய் உட்பட 15 வகையான காய்கறி வகைகள் இங்கு உள்ள சத்துணவு மையத்திற்கு அவ்வப்போது கொடுக்கப்படுகிறது. அவற்றை உணவுடன் மாணவர்கள் ருசித்து சாப்பிடுகின்றனர். மூலிகை தோட்டத்தில் துளசி, துாதுவளை, பச்சிலை, கீழாநெல்லி, சிறியாநங்கை, நாயுருவி, கூரைப்பூ, தும்பை, கற்றாழை உட்பட அரிய வகை மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடிகளும் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன.
வகுப்பறைக்கு இரு மரக்கன்றுகள்
எஸ்.ஜே.கோபிநாத், தலைமை ஆசிரியர்: மாணவர்களுக்கு படிப்புடன் விவசாயம் சார்ந்த அறிவு குறிப்பாக இயற்கையை நேசிப்பதை ஊக்குவிக்கிறோம். சுற்றுசூழல், வனவளம் அதிகரிக்கச் செய்யும் நோக்கில் அவர்களை கொன்றை, மலைவேம்பு, புளி, பெருங்கொன்றை உட்பட 10 வகையான மரக்கன்று ரகங்களை ஆயிரக்கணக்கில் விதை பந்துகளாக தயாரித்து சோத்துப்பாறை, கும்பக்கரை பகுதியில் தூவி விட்டுள்ளோம். அதில் முளைத்துள்ள விதைகள் கண்காணிக்கப்படுகின்றன. வீட்டுக்கு ஒரு மரக்கன்று வளர்ப்போம் என்ற வார்த்தையை தழுவி வகுப்பறைக்கு இரு மரம் வளர்ப்போம் என்று மரக்கன்றுகளை நட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்துள்ளோம்., என்றார்.
துாய்மைப் பணிகள்
ஆர். அப்துல் ரஹீம், தேசிய மாணவர் படை ஆசிரியர்: மாணவர்களுக்கு கல்வி அறிவுடன் இயற்கை அறிவை நேசிக்கும் விதமாக பிளாஸ்டிக், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் உட்பட சமூக நோக்கத்துடன் ஊர்வலங்கள் நடத்துகிறோம். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். துாய்மை பாரத திட்டத்தில் அவ்வப்போது களப்பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன. தேசிய மாணவர் படையில் உள்ள 100 மாணவர்கள் மரங்கன்றுகளை நட்டு பாதுகாப்பதுடன், அவர்களுக்கு காய்கறி கழிவுகளையும், முட்டை தோல்களையும் மிகச் சிறிய தூளாக மக்கச் செய்வதுடன், மண்புழு உரம், மாட்டு எரு, ஆட்டு எரு உள்ளிட்டவைகள் எவ்வாறு இயற்கை உரங்களாக பயன்படுகிறது என மாணவர்களுக்கு களப்பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.