ADDED : ஜூலை 03, 2024 05:35 AM

தேனி : தேனி வடபுதுப்பட்டி நாடர் சரஸ்வதி பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.
இதில் மாவட்டத்தில் உள்ள 17 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகள் 12,14,17,19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மாணவர்களை ஊக்குவித்தனர்.