ADDED : ஜூன் 02, 2024 04:10 AM
ஆண்டிபட்டி: ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் கோயில் காவலராக பணியாற்றி வந்த பாண்டியன், 34 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்த பின் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பாராட்டு விழாவில் வேலப்பர் கோயில் தக்கார் மாரிமுத்து தலைமை வகித்தார்.
செயல் அலுவலர் நதியா, ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி, செயல் அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரமேஷ் உட்பட தேனி மாவட்டத்தின் பல்வேறு கோயில் பணியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் வாழ்த்தினர்.