/உள்ளூர் செய்திகள்/தேனி/ போதிய அளவில் உரங்கள் கையிருப்பு வேளாண்துறை தகவல் போதிய அளவில் உரங்கள் கையிருப்பு வேளாண்துறை தகவல்
போதிய அளவில் உரங்கள் கையிருப்பு வேளாண்துறை தகவல்
போதிய அளவில் உரங்கள் கையிருப்பு வேளாண்துறை தகவல்
போதிய அளவில் உரங்கள் கையிருப்பு வேளாண்துறை தகவல்
ADDED : ஜூன் 13, 2024 06:51 AM
தேனி: தேனி மாவட்டத்தில் வேளாண் பணிக்கு தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்காக யூரியா 2335 டன், டி.ஏ.பி., 672 டன், பெட்டாஷ் 450 டன், காம்ளக்ஸ் 4360 டன் கையிருப்பு உள்ளது. மாவட்டத்தில் தற்போதைய தேவைக்கு போதிய அளவு உரங்கள் கையிருப்பு உள்ளது.
மாவட்டத்திற்கு இம்மாத இறுதியில் யூரியா 1220டன், டி.ஏ.பி., 300 டன், பொட்டாஷ் 360 டன், காம்ளக்ஸ் 3010 டன் உரங்கள் மதுரை, திண்டுக்கலுக்கு ரயில் மூலம் வந்து தேனி மாவட்டத்திற்கு லாரிகளில் வர உள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகள் மூலம் தடையின்றி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூடைகள் எடைகுறைவு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விவசாயிகள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், உதவி இயக்குனர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றனர்.