/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியகுளம் நகர் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்கு பெரியகுளம் நகர் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்கு
பெரியகுளம் நகர் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்கு
பெரியகுளம் நகர் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்கு
பெரியகுளம் நகர் பகுதியில் பகலில் எரியும் தெருவிளக்கு
ADDED : ஜூலை 22, 2024 07:22 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் பகலில் வீணாக தெருவிளக்கு எரிவதும், இரவில் பல இடங்களில் எரியாமல் உள்ளது. இதனால் தேவையில்லாமல் மின் செலவு ஏற்படுகிறது.
இந்நகராட்சிப் பகுதியில் 30 வார்டுகள் உள்ளன. 45 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். நகர் பகுதியில் 1638 தெரு விளக்குகள் உள்ளது. இந்த விளக்குகள் பல பகுதிகளில் பகல் முழுவதும் எரிகிறது. இரவு நேரத்தில் பல பகுதிகளில் எரிவதில்லை. இதனால் நகராட்சிக்கு தேவையில்லாமல் மின் செலவு ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பகல் முழுவதும் எரிவதால் எவ்வித பயனும் இல்லை. அதே நேரத்தில் இரவு நேரங்களில் பல பகுதிகளில் எரியாதால் சைக்கிள்கள், டூவீலர்கள் உட்பட வாகன திருட்டு நடக்கிறது. திருடர்கள் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது.