Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ சிறுமிக்கு பாலியல் சீண்டல் 70 வயது முதியவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் சீண்டல் 70 வயது முதியவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் சீண்டல் 70 வயது முதியவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் சீண்டல் 70 வயது முதியவருக்கு சிறை

ADDED : ஜூலை 31, 2024 06:12 AM


Google News
மூணாறு, : பதினைந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 70 வயது முதியவருக்கு 51 மாதங்கள் சிறை, ரூ.75,500 ஆயிரம் அபராதம் விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இடுக்கி மாவட்டம் ராஜாகாடு அருகே மம்மட்டிகானம் கள்ளிமலை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார்.

ராஜாகாடு போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அன்றைய சப் இன்ஸ்பெக்டர் ஜூடி, குமாரை கைது செய்தார். இந்த வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான்சன், குமாருக்கு 51 மாதங்கள் சிறையும், ரூ.75, 500 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபாராத தொகையை சிறுமிக்கு வழங்கவும், அத்தொகையை செலுத்த தவறினால் மேலும் ஏழு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ஸ்மிசூ கே.தாஸ் ஆஜரானார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us