ADDED : ஜூன் 06, 2024 04:16 AM
கூடலுார், : கூடலுார் நகராட்சி கேரள எல்லையோரத்தில் தள்ளு வண்டியில் அமைக்கப்பட்ட நடமாடும் கடைகளில் புகையிலை அதிகம் விற்பனை செய்வதாக புகார் இருந்தது.
புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி சோதனை மேற்கொண்டனர். ஏராளமான தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கண்காணிக்கப்படாததால் விற்பனை அமோகமாக நடக்கிறது. தடையை மீறி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஓரளவு தடுக்க முடியும்.