/உள்ளூர் செய்திகள்/தேனி/ வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகம் குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுரை வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகம் குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுரை
வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகம் குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுரை
வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகம் குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுரை
வயிற்றுப்போக்கு பாதிப்பு அதிகம் குடிநீரை காய்ச்சிக் குடிக்க அறிவுரை
ADDED : ஜூன் 06, 2024 04:13 AM
கம்பம் : கம்பம், சின்னமனூர் வட்டாரத்தில் அனைத்து ஊர்களிலும் வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
மாவட்டத்தில் அதிக வெயில், சில வாரங்களாக மழை,வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வருகிறது.
சீதோஷ்ண நிலை மாற்றம், ஆற்றில் வரும் மழை வெள்ள நீரை அப்படியே குடிநீராக பருகுவது போன்ற காரணங்களால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வருகிறது. கம்பம், சுருளிப்பட்டி ,காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி , சின்னமனூர், கன்னிசேர்வை பட்டி , காமாட்சிபுரம், ஓடைப்பட்டி பகுதிகளிலும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு வரத் துவங்கி உள்ளனர்.
ஏற்கெனவே படுக்கைகளில் நோயாளிகள் இருப்பதால், கம்பம் அரசு மருத்துவமனையில்வயிற்றுப் போக்கு பாதித்தவர்களை கீழே படுக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம செவிலியர்கள் கிராமங்களில் குடிக்கும் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.