Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ சுதாரித்தும் விடாமல் துரத்திய விதி வீடு இடிந்து பெண் பலி: மூவர் காயம்

 சுதாரித்தும் விடாமல் துரத்திய விதி வீடு இடிந்து பெண் பலி: மூவர் காயம்

 சுதாரித்தும் விடாமல் துரத்திய விதி வீடு இடிந்து பெண் பலி: மூவர் காயம்

 சுதாரித்தும் விடாமல் துரத்திய விதி வீடு இடிந்து பெண் பலி: மூவர் காயம்

ADDED : டிச 01, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்: கனமழையால், பழைய வீட்டில் துாங்குவதை தவிர்த்து, பக்கத்தில் இருந்த மற்றொரு வீட்டில் துாங்கிய குடும்பத்தினர் மீது, பழைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், மகள் பலியாக, அவரது பெற்றோர், சகோதரி காயமடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சியை சேர்ந்தவர் முத்துவேல், 56; கூலி தொழிலாளி. இவரது மனைவி சீதா, 45.

இவர்களின் மகள்கள் கனிமொழி, 21; பி.பி.ஏ., பட்டதாரி. ரேணுகா, 20; டிப்ளமா அக்ரி படித்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான பழைய ஓட்டு வீடு ஒன்றும், ஆஸ்பெட்டாஸ் ஷீட் வேய்ந்த வீடும் உள்ளன.

இதில், ஓட்டு வீடு மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், இவர்கள் ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூரை வேய்ந்த வீட்டில் உறங்கினர். அப்போது, கனமழையால், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, முத்துவேல் குடும்பத்தினர் துாங்கிய வீட்டின் மேல் விழுந்தது.

இதில், முத்துவேல், சீதா, கனிமொழி, ரேணுகா ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர், காயமடைந்தவர்ளை மீட்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில், ரேணுகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ரேணுகா இறந்தார்.

கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், காயமடைந்து சிகிச்சையில் உள்ள முத்துவேல், சீதா, கனிமொழியை, கும்பகோணம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர் மழையால், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா சிவகளை பரும்பு பகுதியை சேர்ந்த பலவேசம், 81, என்பவர் வீட்டின், ஒரு பக்கத்தில் உள்ள மண் சுவர் இடிந்து விழுந்தது.

உள்ளே படுத்திருந்த அவர் மீது சுவர் விழுந்ததால் பலவேசம் படுகாயமடைந்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பலவேசம் நேற்று காலை உயிரிழந்தார். ஏரல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us