Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ போலி உர மூட்டைகள் உரிமையாளர் மீது வழக்கு

போலி உர மூட்டைகள் உரிமையாளர் மீது வழக்கு

போலி உர மூட்டைகள் உரிமையாளர் மீது வழக்கு

போலி உர மூட்டைகள் உரிமையாளர் மீது வழக்கு

ADDED : ஜூன் 29, 2025 01:27 AM


Google News
தஞ்சாவூர், சேலம் மாவட்டம், சிறுவாச்சூரில், இயற்கை உரம் என்ற பெயரில் டி.ஏ.பி., என்பதை ஒ.ஏ.பி., என விற்கப்பட்டு வந்தது. தகவலறிந்த வேளாண் துறையினர், ஜூன் 19ல் விசாரித்து, போலி உர மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.

போலி உரங்கள் தஞ்சாவூரில் இருந்து வருவதாக தெரியவந்தது. மேலும், போலி உரங்களை ஏற்றி வந்த டிரைவர், விற்பனையாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, தலைவாசல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் வேளாண் அலுவலர்கள், அளித்த தகவலில், தஞ்சாவூர் வடக்கு வீதியில் குடோன் ஒன்றில், சோதனை செய்தனர். இதில், சிமென்ட் சாக்குகளில், 15 டன் போலி உரங்கள் இருப்பு வைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை ஜூன் 26ம் தேதி வேளாண்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேற்கு போலீசில், வேளாண் அலுவலரும், உர ஆய்வாளருமான தினேஷ்வரன் அளித்த புகாரில், போலி உரம் தயரித்த

ஆனந்தராஜ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us