Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

போதை டிரைவரால் விபத்து பஸ்கள் மோதல்: 43 பேர் காயம்

ADDED : ஜூலை 31, 2024 08:59 PM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ்சும், கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூருக்கு லிங்கன் என்ற தனியார் பஸ்சும் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியருடன் சென்றன. ஏராளமான மாணவ - மாணவியரும் பயணித்தனர்.

இதில், பி.எல்.ஏ., பஸ்சை தஞ்சாவூரைச் சேர்ந்த அருள், 35, லிங்கன் பஸ்சை திருவையாறைச் சேர்ந்த செல்வகுமார், 27, ஓட்டினர். தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் வயலுார் கிராமத்தில் இரண்டு தனியார் பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்தில், இரண்டு பஸ் டிரைவர்கள் உட்பட 43 பயணியர் படுகாயமடைந்த நிலையில், 25 பயணியர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்தால், தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிரைவர் செல்வகுமார் மது போதையிலும், மொபைல் போனில் பேசியபடி அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக பயணியர் தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us