ADDED : செப் 07, 2025 01:52 AM
தென்காசி:தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கடனாநதி மஞ்சம் புளி அணைக்கட்டில், கீழஆம்பூரைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் சத்யா, 17, நேற்று குளிக்க சென்றார். அப்போது அவர், ஆழமான பகுதியில் சிக்கி பலியானார்.
அவரது உடலை, அம்பாசமுத்திரம் தீயணைப்பு படையினர் மீட்டனர். ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.