Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ கிணற்றில் தாய், குழந்தை சடலம்

கிணற்றில் தாய், குழந்தை சடலம்

கிணற்றில் தாய், குழந்தை சடலம்

கிணற்றில் தாய், குழந்தை சடலம்

ADDED : ஜூன் 16, 2025 03:27 AM


Google News
புளியங்குடி: கிணற்றில் மிதந்த தாய், குழந்தை சடலத்தை மீட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் மணக்கடையார் கோவில் செல்லும் பாதையில் மாரிபாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்ட கிணற்றில் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் சடலமாக மிதப்பதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார், தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில், கிணற்றில் விழுந்தது புளியங்குடி, அருணாச்சல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமியின் மனைவி வெண்ணிலா, 28, அவரது 10 மாத ஆண் குழந்தை முகில் என, தெரிந்தது.

போலீசார் வழக்குபதிந்து தாய், குழந்தையின் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us