ADDED : ஜூலை 05, 2025 02:48 AM
தென்காசி:தென்காசி அருகே 17 வயதான வாய் பேச முடியாத மகளை கர்ப்பமாக்கிய தந்தையை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
தென்காசிமாவட்டம் புளியங்குடி பகுதியின் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 45 வயது விவசாயி. இவருக்கு
இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 17 வயதாகும் இரண்டாவது மகளுக்கு வாய் பேச முடியாது. இந்நிலையில் அவரை தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமிக்கு அண்மையில் வயிற்று வலி ஏற்பட்டதால் பாட்டியுடன் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற போது பரிசோதனையில் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.