/உள்ளூர் செய்திகள்/தென்காசி/ விசாரணையில் அத்துமீறல் எஸ்.ஐ., மாற்றம் விசாரணையில் அத்துமீறல் எஸ்.ஐ., மாற்றம்
விசாரணையில் அத்துமீறல் எஸ்.ஐ., மாற்றம்
விசாரணையில் அத்துமீறல் எஸ்.ஐ., மாற்றம்
விசாரணையில் அத்துமீறல் எஸ்.ஐ., மாற்றம்
ADDED : ஜூலை 07, 2024 02:26 AM
தென்காசி:தென்காசி மாவட்டம், புளியரையை சேர்ந்தவர் மகாலிங்கம், 58; ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றினார்.
ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
ஓராண்டுக்கு முன் செய்த புகார் குறித்து விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று எஸ்.ஐ., மகாலிங்கம் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின்படி மகாலிங்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றி தென்காசி எஸ்.பி., சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.