Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மனைவி நல வேட்பு நாள் விழா  

மனைவி நல வேட்பு நாள் விழா  

மனைவி நல வேட்பு நாள் விழா  

மனைவி நல வேட்பு நாள் விழா  

ADDED : செப் 02, 2025 05:28 AM


Google News
சிவகங்கை : சிவகங்கையில் மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு நாள் விழா நடைபெற்றது. மன்ற தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார். செயலர் ராமநாதன், நல்லாசிரியர் கண்ணப்பன், பேராசிரியர்கள் தினகரன், மகேஷ்வரன் முன்னிலை வகித்தனர்.

பாண்டிவேல், கண்ணப்பன், பொறியாளர் சுந்தரமாணிக்கம் பங்கேற்றனர். பேராசிரியர் முத்துகுமரேசன் நிகழ்ச்சியை நடத்தினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மன்ற பொருளாளர் உதய சங்கர் நன்றி கூறினார்.

திருப்புத்துார்: திருப்புத்துார் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா நடந்தது.

எம்.காயத்ரி இறைவணக்கம் பாடினார். அ.சுப்பிரமணியன் துரிய தவம் நடத்தினார். மன்ற தலைவர் சுகுமார் வரவேற்றார்.

துணைத் தலைவர் அரசரெத்தினம் தலைமை வகித்தார். வேதாத்திரி கவிதை நலம் குறித்து பூங்குன்றன் சிறப்புரை வகித்தார். ஆழியாறு இணை இயக்குநர் பூங்குன்றன் பேசினார். விழாவில் பங்கேற்ற தம்பதிகளை கவுரவித்தனர்.

பொருளாளர் வாசு நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us