Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 

சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 

சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 

சிவகங்கையில் 88,761 பேருக்கு  ரூ.44.20 கோடி நலத்திட்ட உதவி 

ADDED : ஜூன் 04, 2025 12:57 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை மூலம் 88,761 தொழிலாளர்களுக்கு ரூ.44.20 கோடி வரை நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் மூலம் உடல் உழைப்பு தொழிலாளர், ஆட்டோ டிரைவர், கட்டுமான தொழிலாளர் என அனைத்து தரப்பு தொழிலாளர்களும் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.

நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள், அவர்களது வாரிசுகளுக்கு கல்வி, மருத்துவம், திருமணம், இயற்கை மரணம், பணியிட விபத்து மரணம், வீட்டு வசதி திட்டம், ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது.

4 ஆண்டில் ரூ.44.20 கோடி உதவி: கடந்த 4 ஆண்டில் தொழிலாளர் நலத்துறையில் புதிய உறுப்பினர்களாக 37,737 பேர் பதிவு செய்துள்ளனர்.

20,489 பேர் தொடர்ந்து பதிவினை புதுப்பித்து வருகின்றனர். 4 ஆண்டில் 88,761 தொழிலாளர்களுக்கு ரூ.44.20 கோடி வரை நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us