Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 

வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 

வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 

வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா கொடியேற்றம் மே 17ல் தேர்பவனி 

ADDED : மே 10, 2025 07:21 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

வல்லனி அன்னை தெரசா சர்ச் திறக்கப்பட்டதும், முதல் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ரூ.7 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கொடிமரத்தில் மறைமாவட்ட முதன்மை குரு ஆர்.அருள்ஜோசப்நேற்று மாலை 5:45 மணிக்கு கொடியேற்றி வைத்து, சிறப்பு திருப்பலியை நடத்தி வைத்தார்.பாதிரியார் வி.சூசைமாணிக்கம் கொடிமரத்தை புனிதப்படுத்தினார்.

கூட்டுத்திருப்பலியை பாதிரியார்கள் ஆரோக்கியதாஸ், அமல்ராஜ் நடத்தினர். மே 18 வரை நடைபெறும் விழாவில் தினமும்மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி, நற்கருணை பவனி நடைபெறும். 9 ம் நாளான மே 17 அன்று மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலி தேர்பவனி நடைபெறும்.

10ம் நாளான மே 18 அன்று திருவிழா நிறைவு திருப்பலி, புதுநன்மை பெருவிழா, கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறும். கொடியேற்ற விழாவில் பங்கு இறைமக்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us