/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கலைத்திருவிழா போட்டியில் வலசைப்பட்டி மாணவர்கள் கலைத்திருவிழா போட்டியில் வலசைப்பட்டி மாணவர்கள்
கலைத்திருவிழா போட்டியில் வலசைப்பட்டி மாணவர்கள்
கலைத்திருவிழா போட்டியில் வலசைப்பட்டி மாணவர்கள்
கலைத்திருவிழா போட்டியில் வலசைப்பட்டி மாணவர்கள்
ADDED : ஜன 08, 2025 06:19 AM

எஸ்.புதுார் : மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வலசைபட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டி நடத்தப்பட்டது. ஒன்றிய, மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டி ஈரோடு மாவட்டத்தில் ஜன. 3ல் நடந்தது.
இதில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 36 பேர் 18 போட்டிகளில் வெற்றி பெற்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் 6 போட்டியில் 13 பேர் வென்றுள்ளனர். இதில் எஸ்.புதுார் ஒன்றியம் வலசைபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அழகுராஜா, கிமேஷ், சிவா, பிரவீன், ஆகாஷ், பொ.அழகர்சாமி, சு.அழகர்சாமி, வெள்ளைச்சாமி ஆகியோர் தெருக்கூத்து போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தனர்.
இவர்களை தலைமையாசிரியர் கண்ணப்பன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி பாலம்மாள், உறுப்பினர் துரை, ஆசிரியர்கள் பாராட்டினர்.
* நாட்டரசன்கோட்டை அரசு உதவி பெறும் கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் மாநில கலைத்திருவிழா பரத நாட்டியப்போட்டியில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகள் நளினாஸ்ரீ, ஹாசினி, இனியா, சஞ்சுஸ்ரீ பயிற்சி அளித்த இசை ஆசிரியர் சாந்தி, சிறப்பு பயிற்றுநர் ரேவதி ஆகியோரை பள்ளிக் குழுத்தலைவர் கண்ணப்பன், செயலர் நாகராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கிய ஸ்டெல்லா உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.