Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

ADDED : மே 15, 2025 05:03 AM


Google News
சிவகங்கை: காளையார்கோவில் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலில் மே 31 ல் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக திருவிழா துவங்குகிறது. ஜூன் 8 ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில், மே 30 ம் தேதி இரவு 7:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். மே 31 அன்று காலை 10:35 முதல் 11:15 மணிக்குள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு வைகாசி விசாக திருவிழா துவங்குகிறது. அன்று இரவு சுவாமி, அம்பாளுடன் காமதேனு, வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவார். திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 10:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். தினமும் இரவு 7:00 மணிக்கு சுவாமி, அம்பாளுடன் அன்னம், கிளி, ரிஷபம், யானை, சிம்மம், குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.

திருவிழாவின் 7 ம் நாளான ஜூன் 6 ம் தேதி பொய்ப்பிள்ளை, மெய்ப்பிள்ளை ருத்ர தீர்த்தம் நடைபெறும். எட்டாம் நாள் விழாவான ஜூன் 7 ம் தேதி நடராஜர் அபிேஷகம் நடைபெரும். ஒன்பதாம் நாளான ஜூன் 8 ம் தேதி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் பிரியாவிடையுடன் சுவாமி, சவுந்திரநாயகி தேரிலும், சப்பரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் எழுந்தருள்வர். தொடர்ந்து சிறப்பு அபிேஷகம் நடைபெறும். அன்று காலை 10:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான ஜூன் 9 ம் தேதி தெப்ப உற்சவம், ஸப்தாவரண பூஜைகளுடன் வைகாசி விசாக திருவிழா நிறைவு பெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us