ADDED : ஜூன் 02, 2025 10:40 PM
தேவகோட்டை: எழுவங்கோட்டை தென்னிலை நாட்டின் தலைமை கோயிலாக விஸ்வநாதர் அகிலாண்டேஸ்வரி கோயில் உள்ளது.
இக்கோயிலில் வைகாசி விழா நேற்று முன்தினம் கொடியேற்றம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் மாலையில் சுவாமி விஸ்வநாதர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி, விநாயகர், முருக பெருமான், சன்டீகேஸ்வரர் ஆகியோருக்கு அபிஷேகம் நடைபெற்று தினமும் இரவிலும், பகலிலும் வீதி உலா நடந்து வருகிறது.
நாளை திருக்கல்யாணமும், 8ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.