ADDED : ஜூன் 02, 2025 12:41 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் சிவச்சந்திரன் 18. இவர் மே 30ஆம் தேதி இரவு அணைக்கரைப்பட்டி உப்பாற்று பாலம் அருகே டூவீலரை வேகமாக ஒட்டி வந்துள்ளார்.
அப்போது ரோட்டோரத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிங்கம்புணரி குறிஞ்சிநகரை சேர்ந்த செந்தில்குமார் 38, மீது மோதியதில் இருவரும் காயமுற்றனர். டூவீலரை ஓட்டிவந்த சிவச்சந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.