Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விடுப்பில் தான் செல்ல வேண்டும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விடுப்பில் தான் செல்ல வேண்டும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விடுப்பில் தான் செல்ல வேண்டும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விடுப்பில் தான் செல்ல வேண்டும்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

ADDED : ஜூன் 28, 2025 06:49 AM


Google News
சிவகங்கை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு சென்றால் தற்செயல் விடுப்பில் தான் செல்ல வேண்டும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் ஜூலை 2 முதல் 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பணியிட மாறுதல் கோரி 38,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.2025 ஜூன் 30 நிலவரப்படி காலிப்பணியிடங்களை கல்வி மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதில் உபரி ஆசிரியர்களை காலிபணியிட பட்டியலில் சேர்க்க கூடாது. இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் நாட்களில் அதில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து தான் செல்ல வேண்டும்.

புகாருக்கு உள்ளாகி ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட ஆசிரியருக்கு மீண்டும் அதே பள்ளியை வழங்கக்கூடாது. கவுன்சிலிங் காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை அந்தந்த மாவட்ட (தொடக்க கல்வி) கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us