ADDED : மார் 21, 2025 05:54 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே தி.புதுப்பட்டியில் எஸ்.ஐ., வைரமணி உள்ளிட்ட போலீசார் நேற்று காலை ரோந்து சென்ற போது போதிய ஆவணம் இல்லாமல் மணலுடன் வந்த டிராக்டரை பிடித்து விசாரித்தனர்.
அதில் டிராக்டர் டிரைவர் காரையூர் முருகேசன் மகன் சதீஷ்குமார் 31, என்பதும், பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. சதீஷ்குமாரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.