Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மனுவை மாலையாக அணிந்து ஜமாபந்திக்கு வந்த வாலிபர்

மனுவை மாலையாக அணிந்து ஜமாபந்திக்கு வந்த வாலிபர்

மனுவை மாலையாக அணிந்து ஜமாபந்திக்கு வந்த வாலிபர்

மனுவை மாலையாக அணிந்து ஜமாபந்திக்கு வந்த வாலிபர்

ADDED : மே 28, 2025 07:47 AM


Google News
திருப்புவனம் : திருப்புவனத்தில் வட்டார அளவிலான ஜமாபந்தி நடந்து வருகிறது.மக்களின் மனுக்கள் மீது தாசில்தார் விஜயகுமார் தலைமையிலான வருவாய்துறையினர் விசாரணை நடத்தி தீர்வு கண்டு வருகின்றனர். ஏனாதியைச் சேர்ந்த ஆனைக்கரன், இவரது தாயார் சின்னம்மாள் நத்தம் புறம்போக்கில் வசித்து வருகின்றனர். வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்ததை அடுத்து 2023ல் பட்டா வழங்கப்பட்டது.

கணினி பட்டா வழங்கப்படவில்லை. கணினி பட்டா வழங்கினால் தான் உரிய அனுமதிக்கு விண்ணப்பித்து வீடு கட்ட முடியும். இதனை கண்டித்து நேற்று ஆனைக்கரன் கணினி பட்டா வழங்க கோரி இதுவரை வழங்கிய மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து ஜமாபந்தியில் மனு கொடுத்தார்.

வருவாய்துறையினர் கூறுகையில்: இலவச வீட்டு மனையை பத்து வருடங்களுக்குள் விற்பனை செய்ய கூடாது. எனவே பத்து வருடங்களுக்கு கணினி வழி பட்டா வழங்கப்படாது. எனவே பட்டா வழங்கப்படவில்லை, இது குறித்து அவரிடம் தெளிவுபடுத்தியும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார், என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us