/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு
கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு
கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு
கோடையில் 5000 டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு
ADDED : ஜூன் 27, 2025 11:56 PM
சிவகங்கை: சிவகங்கையில் 1,551 எக்டேரில் கோடை காலத்தில் நெல் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய 2 இடங்களில் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் 6 இடங்களில் ஏற்படுத்த நுகர்பொருள் வாணிப கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை நீரை கண்மாய்களில் ஓரளவிற்கு தேக்கி வைத்துள்ளனர். இந்த நீர் மூலம் கோடையில் நெல் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். கொள்முதல் செய்வதற்காக திருமாஞ்சோலை, நெல்முடிக்கரையில் கொள்முதல் நிலையம் ஜூன் 9 முதல் செயல்படுகிறது.
கோடை பருவத்தில் 5,000 டன் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர். 2 கொள்முதல் நிலையத்தில் மட்டுமே 128 விவசாயிகளிடம் 503 டன் வரை நெல் கொள்முதல் செய்து, அவர்களுக்கான விலை சன்னரகம் குவிண்டால் (100 கிலோ) ரூ.2,450, பொது ரகம் ரூ.2,405 வழங்கப்படுகிறது.
128 விவசாயிகளுக்கு இது வரை கொள்முதல் விலையாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 21 ஆயிரத்து 540 விடுவித்துள்ளனர்.
கூடுதலாக கீழநெட்டூர், பனையூர், இடைக்காட்டூர், முத்தனேந்தல், எஸ்.ஆர்., பட்டினம், சின்ன கண்ணனுார் ஆகிய 6 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகம் எடுத்து வருகிறது.