ADDED : செப் 13, 2025 11:33 PM
சிவகங்கை: முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன், மாவட்ட நீச்சல் கழக தலைவர் ஜெயதாஸ் துவக்கி வைத்தனர். 10 பிரிவுகளில் நடந்த நீச்சல் போட்டியில் முதல் இடம் பிடித்தவர்கள் மாநில அளவில் நடை பெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். செயலர் ஜெயமுருகன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார்.