ADDED : மே 18, 2025 12:24 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள திருவேலங்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்ல இருந்தார்.
நேற்று உறவினர் பாண்டி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். காரைக்குடி கழனிவாசல் அருகே சென்ற போது சரக்கு வாகனத்தில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் மாணவர் உயிரிழந்தார். பாண்டி காயத்துடன் உயிர் தப்பினார். குன்றக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.