Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் தேர்பவனி   இன்று காலை திருவிழா நிறைவு  

ADDED : செப் 29, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
மானாமதுரை : சிவகங்கை அருகே வி.மிக்கேல்பட்டணம் புனித மிக்கேல் அதிதுாதர் சர்ச் திருவிழா தேர்பவனி நடந்தது.

இங்கு செப்., 19 அன்று மறை மாவட்ட பொருளாளர் ஆரோன் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கினார். தினமும் மாலை 6:00 மணிக்கு சிறப்பு, நவ நாள் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து கொடி பவனி நடைபெற்றது. புதிதாக கட்டிய சூசையப்பர் கெபியை மைக்கேல்ராஜ் அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித மிக்கேல் அதிதுாதர் எழுந்தருளினார்.

சர்ச் வளாகத்தில் இருந்து தேர் பவனி துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று காலை 8:30 மணிக்கு புனித மரியன்னை சர்ச் பங்கு தந்தை ெஹன்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஜெபமாலை ராஜா தலைமையில் பங்கு தந்தையர்கள் நற்கருணை பவனி நடைபெற்றது.

இன்று (செப்., 29) காலை 9:00 மணிக்கு பங்கு தந்தை ஜேம்ஸ் தலைமையில் கொடியிறக்க நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாட்டை கிராம கமிட்டி தலைவர் மரியான் தலைமையில் கமிட்டியினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us