Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் ஜூலை 4ல்  பேச்சு, கட்டுரை போட்டி 

சிவகங்கையில் ஜூலை 4ல்  பேச்சு, கட்டுரை போட்டி 

சிவகங்கையில் ஜூலை 4ல்  பேச்சு, கட்டுரை போட்டி 

சிவகங்கையில் ஜூலை 4ல்  பேச்சு, கட்டுரை போட்டி 

ADDED : ஜூலை 02, 2025 12:26 AM


Google News
சிவகங்கை,:

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு ஜூலை 4 ம் தேதி சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் கட்டுரை, பேச்சு போட்டி நடைபெறுகிறது.

மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஜூலை 4 ம் தேதி காலை 9:00 மணிக்கு போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2 ம்பரிசு ரூ.7 ஆயிரம், 3 ம் பரிசு ரூ.5 ஆயிரம் பரிசு, பாராட்டு சான்று வழங்கப்படும். கட்டுரை போட்டி தலைப்பு ஆட்சிமொழி வரலாற்றில் கீ.ராமலிங்கம் மற்றும் பன்மொழி புலவர் கா.அப்பாதுரையின் தமிழ் ஆட்சி சொல் பணி என்ற தலைப்பிலும், பேச்சு போட்டிக்கு தலைப்பு 1 கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, 2 அன்னை தமிழே ஆட்சி மொழி, 3 தொன்று தொட்டு தமிழ்நாடு எனும் பெயர், 4. அண்ணா கண்ட தமிழ்நாடு, 5 ஆட்சிமொழி விளக்கம், 6. தமிழ்நாடு என பெயர் சூட்டிய நிகழ்வு, 7. ஆட்சி மொழி சங்ககாலம் தொட்டு, 8. இக்காலத்தில் ஆட்சி மொழி ஆகிய தலைப்பில் பேசலாம்.

மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us