Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: மூன்று பேர் கைது

பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: மூன்று பேர் கைது

பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: மூன்று பேர் கைது

பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: மூன்று பேர் கைது

ADDED : ஜூன் 05, 2025 01:17 AM


Google News
காரைக்குடி: பள்ளத்துாரில் பால் வண்டியில் கடத்தி வரப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

பள்ளத்துாரில் அரிசி ஆலைக்கு பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக பள்ளத்துார் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. நேற்று பள்ளத்துாருக்கு வந்த பால் வேன் ஒன்றை போலீசார் ஆய்வு செய்தனர். 60 மூடைகளில் மூன்று டன் ரேஷன் அரிசி கடத்தியது, தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டது மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ஆறுமுகம் 35, மேல அனுப்பானடியை சேர்ந்த ஆனந்தகுமார் 24, மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த விஜய் 35 என்பது தெரிய வந்தது. பள்ளத்துார் போலீசார் மூவரையும் கைது செய்து, கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us