Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் யானை தந்தம் மான் கொம்புகள் கடத்தல்

 சிவகங்கையில் யானை தந்தம் மான் கொம்புகள் கடத்தல்

 சிவகங்கையில் யானை தந்தம் மான் கொம்புகள் கடத்தல்

 சிவகங்கையில் யானை தந்தம் மான் கொம்புகள் கடத்தல்

ADDED : டிச 01, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் அல்லுாரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள், மான் கொம்புகளை வனத்துறையினர் மீட்டனர். அவற்றை கடத்திய 8 பேரை கைதும் செய்தனர்.

சிவகங்கை அருகே அல்லுாரில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டை வனத்துறையினர் சோதனை செய்தனர். அங்கு 2 யானை தந்தங்கள், மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் தினேஷ், சிவகங்கையைச் சேர்ந்த காசிநாததுரை 54, ஜெயசூர்யா 26, ரகு 31, அசோக் 43, மதுரை முருகேசன் 63, காளையார்கோவில் பாஸ்கரன் 48, ஆகியோரை கைது செய்தனர். அவற்றை கோயம்புத்துார் மாவட்டம் சிறுமுகை மல்லப்பன் என்பவரிடம் இருந்து வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். பின் மல்லப்பனையும் போலீசார் கைது செய்தனர். இதில் போலீஸ்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us