Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி மந்தம்

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி மந்தம்

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி மந்தம்

சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணி மந்தம்

ADDED : செப் 08, 2025 06:08 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் ஒரு பகுதியில் கட்டுமானப்பணி நடந்துவருவதால் பஸ்களை மதுரை - தொண்டி ரோட்டில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த பஸ் ஸ்டாண்டில் கடந்த ஆட்சியில் காளையார்கோவில், தொண்டி, மானாமதுரை , மேலுார் பஸ்கள் நிற்க ரூ.74 லட்சத்தில் மேற்கூரை அமைத்தனர். பின் இப்பகுதியில் விரிவாக்கப்பணி ரூ.1.95 கோடியில் 2023 மார்ச்சில் தொடங்கியது.

நீண்ட இழுபறிக்கு பின் 18 கடைகள் தரைத்தளம், கழிப்பிடம் கட்டப்பட்டது.

தற்போது திருப்புத்துார், மதுரை பஸ்கள் நிற்கும் பகுதியில் 2 ம் கட்டமாக கூரை அமைக்க எம்.பி.,க்கள் நிதியில் ரூ.2 கோடி ஒதுக்கினர். பிப்.26ம் தேதி இதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு மதுரை, திருச்சி, திருப்புத்துார் பஸ்கள் நிற்கும் பகுதியில் கூரை, தோரணவாயில், சி.சி.டி.வி., கேமரா, டிஜிட்டல் பலகை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணியை ஆக., மாதத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். ஆனால், இங்கு பணிகள் மிக மந்த நிலையில் நடந்து வருகிறது.

இதனால் பஸ்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பணிகளை ஆய்வு செய்து விரைவு படுத்த நகராட்சி பொறியியல் பிரிவில் அலுவலர்களே இல்லை.

நகராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பு பணியை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us