ADDED : செப் 09, 2025 04:10 AM
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி இமானு வேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு செப்.,11 அன்று சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகாவில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்காக செப்.,11 அன்று பள்ளி, கல்லுாரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக செப்., 20 அன்று பள்ளி, கல்லுாரி, இதர கல்வி நிறுவனங்கள் செயல்படும், என்றார்.