ADDED : செப் 02, 2025 11:51 PM

சிவகங்கை; காளையார் கோவில் அருகே மறவமங்கலம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த லாரியை மறித்தனர். லாரியில் இருந்த ஒருவர் தப்பினார். டிரைவரிடம் விசாரித்ததில் அவர் காளையார்கோவில் அருனாச்சி குடியிருப்பு போதுராஜ் 27 என்பதும் அவருடன் லாரி உரிமையாளர் மாதவநகரை சேர்ந்தவர் வந்ததும் தெரியவந்தது. முப்பையூர் பகுதியில் அனுமதியின்றி 6 யூனிட் சவடு மணல் ஏற்றி வந்ததாக கூறினார். போதுராஜை கைது செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.