Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆன்லைனில் முதலீடு என ரூ.33.28 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு என ரூ.33.28 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு என ரூ.33.28 லட்சம் மோசடி

ஆன்லைனில் முதலீடு என ரூ.33.28 லட்சம் மோசடி

ADDED : ஜூன் 18, 2025 01:41 AM


Google News
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் அய்யனார். இவர் ஏப்.7ல் அலைபேசி பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.

அதன் தொடர்ச்சியாக 'வாட்ஸ் ஆப்' அழைப்பில் ஒருவர் இவரிடம் பேசியுள்ளார். பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று நம்ப வைத்தார். அவர் கூறிய 11 வங்கிக் கணக்கில் 14 பரிவர்த்தனைகளில் ரூ.33 லட்சத்து 28 ஆயிரத்து 684 அனுப்பியுள்ளார். பணம் பெற்ற அந்தநபர் முதலீடு செய்ததற்கான லாபத்தொகை தரவில்லை. இதனால் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் அய்யனார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us