Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ராமேஸ்வரம் - பனாரஸ் ரயில் சிவகங்கையில் நிற்க கோரிக்கை

ராமேஸ்வரம் - பனாரஸ் ரயில் சிவகங்கையில் நிற்க கோரிக்கை

ராமேஸ்வரம் - பனாரஸ் ரயில் சிவகங்கையில் நிற்க கோரிக்கை

ராமேஸ்வரம் - பனாரஸ் ரயில் சிவகங்கையில் நிற்க கோரிக்கை

ADDED : ஜூன் 26, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
சிவகங்கை; ராமேஸ்வரம் - பனாரஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை சிவகங்கை, புதுக்கோட்டை ஸ்டேஷன்களில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்மிக சுற்றுலா தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் விதமாக வடமாநில சுற்றுலா மற்றும் ஆன்மிக பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரம் - பனாரஸ் (வாரணாசி) இடையே (வண்டி எண்: 22535) வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் புதன் தோறும் இரவு 11:55 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்பட்டு 37 ஸ்டேஷன்களில் நின்று 49.15 மணி நேரத்தில் 2,790 கி.மீ., துாரத்தை கடந்து திங்கள் அன்று மதியம் 1:10 மணிக்கு பனாரஸ் சென்று சேர்கிறது.

அதே போன்று ஞாயிறு தோறும் (வண்டி எண்: 22536) பனாரசில் புறப்படும் இந்த ரயில் அதே வழித்தடத்தில் செவ்வாய் அன்று இரவு 10:30 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் 6 மாநிலங்களை சேர்ந்த பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த ரயில் மாவட்ட தலைநகரான சிவகங்கை, புதுக்கோட்டை ஸ்டேஷனில் நிற்காமல் செல்வது பயணிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

அதே நேரம் பனாரஸில் இருந்து ராமேஸ்வரம் வரும் இச்சிறப்பு ரயில் மட்டுமே சிவகங்கை, புதுக்கோட்டையில் நின்று செல்கின்றன. எனவே ரயில்வே நிர்வாகம் ராமேஸ்வரம் - பனாரஸ் ரயிலை இரு வழித்தடத்தில் செல்லும் போதும் சிவகங்கை, புதுக்கோட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us