/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 13 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல் 13 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்
13 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்
13 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்
13 அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்
ADDED : செப் 09, 2025 09:43 PM

சிவகங்கை; சிவகங்கை ஐ.டி.பி.ஐ., வங்கி பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் 13 அரசுப்பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பிரின்டர்ஸ், புர ெஜக்டர் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 அரசு பள்ளிகளுக்கு ஐ.டி.பி.ஐ., வங்கி மூலம் குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு மாரிமுத்து வரவேற்றார். ஐ.டி.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் கனகராஜ், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் சிபி வர்கீஸ், கிளை துணை மேலாளர் சுர்ஜித் பாரதி கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள 13 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பிரின்டர்ஸ், புரஜெக்டர், கரும்பலகைகள் வழங்கப்பட்டது. மாவட்ட உதவித்திட்ட அலுவலர் பீட்டர்லெமாயூ நன்றி கூறினார்.