ADDED : ஜன 06, 2024 06:00 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாக நேர் முகத்தேர்வு நடந்தது.
செயலர் ஆ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவன மனித வள மேம்பாடு அலுவலர்கள் நிர்மல்குமார், மோகன்ராஜ் நேர்முகத் தேர்வை நடத்தினர்.
55 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. மின்னியல் துறைத் தலைவர் பி.வைத்தியநாதன் நன்றி கூறினார்.