ADDED : ஜன 08, 2024 11:59 PM
சிவகங்கை, : மானாமதுரை அருகே வைகை ஆற்றில் விழுந்து இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி கலெக்டர் ஆஷா அஜித்திடம், சிறுவனின் தந்தை மனு அளித்தார்.
மானாமதுரை அருகே பச்சேரி வைகை மீனாட்சிபுரம் பாக்கியம். இவரது மகன் ரிஜிதரன். இச்சிறுவன் கடந்த ஆண்டு டிச., 27 அன்று வைகை ஆற்றில் விழுந்து இறந்து விட்டார்.
விவசாய கூலி வேலை செய்யும் தனக்கு, ஆதரவாக இருந்த மகன் இறந்து விட்டதால், அவரது இறப்பிற்கு நிவாரணம் கோரி சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தார். அவர், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.


