/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: மக்கள் புகார் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: மக்கள் புகார்
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: மக்கள் புகார்
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: மக்கள் புகார்
குடிநீருடன் கழிவுநீர் கலப்பு: மக்கள் புகார்
ADDED : செப் 12, 2025 04:19 AM

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி 21வார்டு தினசரி சந்தை தெற்கு பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும் அவற்றை அதிகாரிகள் சுட வைத்து குடிக்க கூறுவதாகவும் பொதுமக்கள்புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சி 21வார்டு தினசரி சந்தை தெற்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நகராட்சி சார்பில் குடிநீர் முறையாக வழங்குவதில்லை. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்குகின்றனர். அதிலும் குறைந்த அளவு நீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் நீரும் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தாலும் நகராட்சி நிர்வாகத்தினர் அந்த நீரை சுடவைத்து குடிக்க கூறுவதாகவும், இதனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல் பரவுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அமுதா கணேசன் கூறுகையில், எங்கள் பகுதிக்கு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. அதுவும் கழிவு கலந்த தண்ணீர் தான் வருகிறது. இவற்றை பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்த பணியை சரி செய்வதற்கு நகராட்சியில் ஊழியர்கள் இல்லை. அதனால் தண்ணீரை சுட வைத்து குடியுங்கள் என்று கூறுகின்றனர்.
செம்மலர் கூறுகையில், இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக விலைக்கு தண்ணீர் வாங்கி தான் குடித்து வருகிறோம். நகராட்சியில் வழங்கப்படும் தண்ணீர் கழிவு கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை பயன்படுத்தினால் நோய் பரவும் அச்சம் ஏற்படுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் விலை கொடுத்து வாங்கி விடலாம் மற்ற தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப் படுகிறோம். நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.எனவேமாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்கள் பகுதிக்கு முறையான குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.