ADDED : ஜூன் 24, 2024 01:46 AM
திருப்புத்தூர் : திருப்புத்துார் அருகே ரணசிங்கபுரத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட தலைவராக பாக்கியராஜ், செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் மாரிமுத்து, மகளிர் அணி செயலாளர் அஞ்சுகம், தலைமை நிலைய செயலாளர் ராமநாதன், அமைப்பு செயலாளர் வைரமணி, பிரச்சார செயலாளர் மஞ்சுளா, செய்தி தொடர்பாளர் முத்துக்குமரன், மாநில நிர்வாகிகள் மீனாட்சி நாகராஜன், ரமேஷ் தேர்வாகினர். ஊராட்சி செயலர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும்.பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும். அரசு ஊழியர்களை போன்ற அனைத்து சலுகைகளும் அரசு வழங்க வேண்டும் என தீர்மானித்தனர்.