Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கல்லுாரியில் ஆய்வகம் திறப்பு

கல்லுாரியில் ஆய்வகம் திறப்பு

கல்லுாரியில் ஆய்வகம் திறப்பு

கல்லுாரியில் ஆய்வகம் திறப்பு

ADDED : மே 21, 2025 12:15 AM


Google News
சிவகங்கை : சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் உயர்கல்வித்துறையின் சார்பில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆய்வகம் மாணவர்களின் ஓய்வறை கட்டடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ரூ.2.48 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முதல்வர் நளதம் வரவேற்றார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் புதிய வகுப்பறை கட்டடத்திற்கு பூமி பூஜை செய்து கட்டட பணியை தொடங்கி வைத்தார். மானாமதுரை எம்.எல்.ஏ.,தமிழரசி, திருப்புவனம் சேர்மன் சேங்கை மாறன், நகராட்சி தலைவர் துரைஆனந்த் ,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் இந்திரா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us