ADDED : ஜூன் 11, 2025 02:37 AM
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவரை வீட்டு தனிமையில் இருக்க டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி புறநோயாளிகள் பிரிவில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை வீட்டு தனிமையில் இருக்குமாறு அனுப்பிவைத்தனர். ஏற்கனவே நகராட்சி அதிகாரி, கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தநிலையில், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.