ADDED : செப் 19, 2025 02:12 AM
காரைக்குடி: அமராவதிபுதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய கருத்தரங்கம் நடந்தது.
செயலர் சாரதேஸ்வரி பிரியா அம்பா,ராமகிருஷ்ண பிரியா அம்பா ஆசி கூறினர். முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் நித்திலா வரவேற்றார். மதுரை கேட்வே சாப்ட்வேர் சொல்யூஷன் மனித வள மேனேஜர் ஹேமாராகவன் , துர்கா தேவி சிவகாமி விளக்கினர். பேராசிரியர்கள்,மாணவிகள் கலந்து கொண்டனர்.