Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேசிய சுற்றுச்சூழல் தினம்

தேசிய சுற்றுச்சூழல் தினம்

தேசிய சுற்றுச்சூழல் தினம்

தேசிய சுற்றுச்சூழல் தினம்

ADDED : ஜூன் 06, 2025 02:36 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் தேசிய சுற்றுச்சூழல் தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.

ஓவியம், பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சிவசீலா, சாஸ்தா சுந்தரம், ரேவதி, வீரசின்னம்மாள், அசோக்குமார், ஆரோக்கியமேரி, முத்துலட்சுமி, சித்ரா, பாண்டியரசி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிவகங்கை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரிய பயிற்றுநர் முகமதுகாசிம் தலைமையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மரியசெல்வி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சாந்தபிரபா சுற்றுச்சூழல் தினம் பற்றி பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சுற்றுச்சூழல் மன்றம், நிஷா வாய்ஸ் பவுண்டேசன் இணைந்து கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடினர். தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியர் வாசுகி வரவேற்றார். நிஷா வாய்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் கிருஷ்ணன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி கலந்துகொண்டனர்.

* தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கட்டுரை, கவிதை, ஓவிய போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

* பாப்பாகுடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் சார்லஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்று பேசினார். மாணவர்கள் ஆசிரியர்கள் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us