ADDED : செப் 02, 2025 11:49 PM
சிவகங்கை; சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத்துறை இயக்குனருமான சங்கீதா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த், கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், கோட்டாட்சியர் விஜயகுமார், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.