/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கோயில்களில் படி அளக்கும் விழா சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயில்களில் படி அளக்கும் விழா சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயில்களில் படி அளக்கும் விழா சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயில்களில் படி அளக்கும் விழா சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
கோயில்களில் படி அளக்கும் விழா சப்பரங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
ADDED : ஜன 05, 2024 04:45 AM

காரைக்குடி ; காரைக்குடியில் அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் விழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகரச் சிவன் கோயிலில் நடந்தது.
ஆண்டுதோறும் மார்கழி அஷ்டமி தினத்தன்று விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனியாக சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
இந்தாண்டு அஷ்டமி திருவிழா நேற்று காலை நகரச்சிவன் கோயிலில் நடந்தது. விழாவையொட்டி கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் உட்பட அனைத்து சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட 5 சப்பரத்தில் புறப்பட்டு ந.புதுார் செஞ்சை கொப்புடையம்மன் கோயில், மகர் நோன்பு பொட்டல் வழியாக இரவு நகரச் சிவன் கோயிலை அடைந்தனர். படி அளக்கும் நிகழ்வில், படி அளந்த அரிசியை பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்.
மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் நடைபெற்ற மார்கழி அஷ்டமியை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் தனித்தனி வாகனங்களில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் பிரியா விடையுடன் எழுந்தருளினர்.
மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த சப்பரங்களில் எழுந்தருளினர். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் ராஜேஷ், குமார், பரத்வாஜ் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.
தேவகோட்டை: நகர சிவன்கோவிலில் இருந்து தங்க படியுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகள் வீதிகளின் வழியே வந்து பக்தர்களுக்கு படி அளந்த நிகழ்வு நடந்தது. மாலை கோயில் திரும்பிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.